Tamilவிளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக் – இந்திய வீரர்கள் இன்று பங்கேற்கும் போட்டிகளின் விவரங்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 6-வது நாளான இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி:

துப்பாக்கி சுடுதல்:-

ஐஸ்வரி தோமர், ஸ்வப்னில் குசாலே (ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்று), பகல் 12 30 மணி.

பேட்மிண்டன்:-

பி.வி. சிந்து (இந்தியா)- கிறிஸ்டின் கூபா (எஸ்தோனியா), (பெண்கள் ஒற்றையர் லீக் சுற்று), பகல் 12.50 மணி. லக்ஷயா சென் (இந்தியா)- ஜோனதன் கிறிஸ்டி (இந்தோனேசியா) பிற்பகல் 1.40 மணி, எச்.எஸ். பிரனாய் (இந்தியா), டக் பாட் லீ (வியட்நாம்), (ஆண்கள் ஒற்றையர் லீக் சுற்று), இரவு 11 மணி.

டேபிள் டென்னிஸ்:-

ஸ்ரீஜா அகுலா (இந்தியா)- ஜெங் ஜியான் (சிங்கப்பூர்) (பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று), பிற்பகல் 2 30 மணி.

குத்துச்சண்டை:-

லவ்லினா போர்கோஹைன் (இந்தியா)- சன்னிவா ஹாப்ஸ்டட் (நார்வே) (பெண்கள் 75 கிலோ தொடக்க சுற்று), மாலை 3.50 மணி. நிஷாந்த் தேவ் (இந்தியா)- ஜோஸ் கேப்ரியல் (ஈகுவடார்) (ஆண்கள் 71 கிலோ 2-வது சுற்று), நள்ளிரவு 12.34 மணி.

வில்வித்தை:-

தீபிகா குமாரி (இந்தியா)- ரீனா பர்னாட் (எஸ்தோனியா), (பெண்கள் தனிநபர் பிரிவு) மாலை 3.56 மணி. தருண்தீப் ராய் (இந்தியா)- டாம் ஹால் (இங்கிலாந்து) (ஆண்கள் தனிநபர் பிரிவு) இரவு 9.28 மணி.