பாராளுமன்ற தேர்தல் – 5 ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை தொடக்கம்

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப் பதிவு முடிந்து விட்டது.

முதல் கட்டமாக கடந்த 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 18-ந்தேதி 95 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 23-ந்தேதி 116 தொகுதிகளுக்கும், 4-வது கட்டமாக 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும் ஓட்டுப் பதிவு நடந்தது. இதுவரை 373 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து உள்ளது.

5-வது கட்ட வாக்கு பதிவு நாளை (6-ந்தேதி) நடக்கிறது.

5-வது கட்ட ஓட்டுப் பதிவில் 51 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

பீகார் (5), காஷ்மீர் (2), ஜார்க்கண்ட் (4), மத்திய பிரதேசம் (7), ராஜஸ்தான் (12), உத்தரபிரதேசம் (14), மேற்கு வங்காளம் (7).

இந்த 51 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஒய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் வயநாடுக்கு தேர்தல் முடிந்துவிட்டது. அமேதி தொகுதிக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதேபோல ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா போட்டியிடும் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.

நாளை வாக்குப் பதிவை சந்திக்கும் மற்ற முக்கிய தலைவர்கள் வருமாறு:-

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் (லக்னோ), ஸ்மிருதி இரானி (அமேதி), ரத்தோர் (ஜெய்ப்பூர், ரூரல்), ஜெயந்த்சின்கா, அர்ஜின்ராம் மேக்வால். இந்த 51 தொகுதிகளில் 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

5-வது கட்ட தேர்தலில் 8.76 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள். அதில் ஆண் வாக்காளர்கள் 4.63 கோடி பேர் ஆவார்கள். 4.12 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 96,088 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news