X

பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது

பாராளுமன்ற சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நடைபெற இருக்கும் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓம் பிர்லா ராஜஸ்தானின் கோட்டா தொகுதி எம்.பி. ஆவார். இவர் மூன்றாது முறையாக எம்.பி.-ஆக பதவியேற்றுள்ளார். எதிர்கட்சி சார்பில் போட்டியிடும் மவெலிக்கரா சுரேஷ் எட்டாவது முறையாக எம்.பி.-ஆக பதவியேற்று இருக்கிறார்.

முன்னதாக 1952 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. மக்களவையில் துணை சபாநாயகர் பதவியை தர பா.ஜ.க. மறுத்தது.

இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்படும் சபாநாயகருக்கு எதிர்கட்சிகள் ஆதரவு தர மறுத்தது. சபாநாயகருக்கு ஆதரவு இல்லை என்ற நிலைப்பாடு காரணமாக சபாநாயகரை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படுகிறது.