Tamilசெய்திகள்

பாத யாத்திரை நடுவே கபடி போட்டியை கண்டுகளித்த ராகுல் காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக தற்போது அரியானாவை சென்றடைந்துள்ளது. கடந்த 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பாரத் ஜோடோ யாத்திரை அரியாவா வழியாக சென்ற நிலையில் தற்போது மீண்டும் யாத்திரை அரியானாவுக்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல்காந்தி நேற்று கபடி போட்டியை கண்டு களித்தார். அரியானாவின் கர்னல் மாவட்டத்தில் நடந்த உள்ளூர் கபடி போட்டியை ராகுல்காந்தி கண்டு களித்தார். அப்போது, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜிந்தர் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்பட பலர் ராகுல்காந்தியுடன் சேர்ந்து கபடி போட்டியை கண்டு களித்தனர்.