பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் – முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 220 ரன்களுக்கு ஆல் அவுட்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் குயின்டான் டி காக் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

ஜார்ஜ் லிண்டே 35 ரன்னும், டூ பிளசிஸ் 23 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ரபாடா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 220 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிதி, நவ்மான் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் முன்னணி வீரர்களை தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தனர்.

இம்ரான் பட் 9 ரன்னிலும், அபித் அலி 4 ரன்னிலும், பாபர் அசாம் 7 ரன்னிலும், ஷஹீன் அப்ரிதி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதனால் 27 ரன்களை எடுப்பதற்குள் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இறுதியில், முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 2 விக்கெட்டும், நூர்ஜே, கேசவ் மகாராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools