Tamilவிளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் – 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப்-1 முதல் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நேற்று முன் தினம் தொடங்கியது.

இதில் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார், பாகிஸ்தான் வீரர் முகமது சோகைப்பை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் ராம்குமார் 6-0, 6-0 என்ற நேர்செட்டில் முகமது சோகைப்பை பந்தாடினார்.

மற்றொரு ஆட்டத்தில் சுமித் நாகல் (இந்தியா), பாகிஸ்தானின் ஹூஜைய்பா அப்துல் ரகுமானை எதிர்கொண்டார். இதில் சுமித் நாகல் 6-0, 6-2 என்ற நேர்செட்டில் ஹூஜைய்பா அபதுல் ரகுமானை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ்-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, பாகிஸ்தானின் ஹூஜைய்பா அப்துல் ரகுமான்-முகமது சோகைப் இணையை சந்தித்தது. இதில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடி வென்றது.

மாற்று ஒற்றையர் ஆட்டத்தின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல் பாகிஸ்தானின் யூசுப் கலீல் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் 6-1, 6-0 என்ற கணக்கில் சுமித் நாகல் அபார வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் டேவிஸ் கோப்பையில் பாகிஸ்தானை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகத் தகுதிச்சுற்று போட்டிக்கு இந்தியா முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *