Tamilசெய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக சென்னை மின்சார ரெயில் சேவை மாற்றம்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பாரமரிப்புபணி காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*மூர் மார்கெட் – பட்டாபிராம் மிலிட்டரி இடையே இரவு 10.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

*பட்டாபிராம் மிலிட்டரி – ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

*பட்டாபிராம் மிலிட்டரி – சென்னை சென்டிரல் இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ‘ஆவடி மற்றும் சென்டிரல்’ இடையே ஏப்ரல் 1-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*சென்டிரல் – ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ‘சென்டிரல் மற்றும் வியாசர்பாடி’ இடையே ஏப்ரல் 1-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*கும்மிடிப்பூண்டி – சென்டிரல் இடையே காலை 4.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ‘பேசின் பிரிட்ஜ் மற்றும் சென்டிரல்’ இடையே ஏப்ரல் 1-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*சென்டிரல் – கும்மிடிப்பூண்டி இடையே காலை 6.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ‘சென்டிரல் மற்றும் பேசின் பிரிட்ஜ்’ இடையே ஏப்ரல் 1-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*சூல்லூர்பேட்டை – சென்டிரல் இடையே காலை 5 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ‘பேசின் பிரிட்ஜ் மற்றும் சென்டிரல்’ இடையே ஏப்ரல் 1-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்டிரல்- சூல்லூர்பேட்டை இடையே காலை 7.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ‘சென்டிரல் மற்றும் பேசின் பிரிட்ஜ்’ இடையே ஏப்ரல் 1-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*சூல்லூர்பேட்டை – சென்டிரல் இடையே இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ‘கொருக்குபேட்டை மற்றும் சென்டிரல்’ இடையே ஏப்ரல் 1-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*சென்னை சென்டிரல் – திருவள்ளுர் இடையே இரவு 11.15 மணி இய்யக்கப்டும் மின்சார ரெயில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ‘சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11 மணிக்கு இயக்கப்படும்’.

*சென்டிரல் – ஆவடி இடையே இரவு 11.45 மணி இய்யக்கப்டும் மின்சார ரெயில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ‘சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும்’.

*சென்டிரல் – ஆவடி இடையே நல்லிரவு 12.15 மணி இய்யக்கப்டும் மின்சார ரெயில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ‘சென்னை கடற்கரையில் இருந்து நல்லிரவு 12.20 மணிக்கு இயக்கப்படும்’.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.