பயிற்சி ஆட்டத்தின் போது காயமடைந்த ரோகித் சர்மா

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நாளை நடப்பதையொட்டி இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா நேற்று சக வீரர்களுடன் இணைந்து வலைபயிற்சியில் ஈடுபட்டார்.

வங்காளதேச இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் பயிற்சிக்காக இலங்கையை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் அழைக்கப்பட்டு இருந்தார். அவர் வலுவாக எறிந்த ஒரு பந்து ரோகித் சர்மாவின் இடது தொடையில் தாக்கி காயத்தை ஏற்படுத்தியது. இதனால் ரோகித் சர்மா பயிற்சியை பாதியில் கைவிட்டு வெளியேறி சிகிச்சை பெற்றார்.

அதன் பிறகு மீண்டும் பயிற்சிக்கு வரவில்லை. அவரது காயத்தன்மை குறித்து பரிசோதித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு, அவர் உடல்தகுதியுடன் இருப்பதாகவும், முதலாவது ஆட்டத்தில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news