பட்டணம் பெருமாள் கோயில்

இன்று மாநகரமாக விளங்கும் மெட்ராஸில் கோயில்களுக்குப் பஞ்சமில்லை. பழங்காலத்திலிருந்து சமீப காலம் வரை இங்கு ஆயிரக்கணக்கானக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் மிகவும் ஆன்மிகப் பெருமை கொண்ட கோயில்களும் உண்டு. இறந்த பெண்ணை சம்பந்தப் பெருமான் உயிர்ப்பித்த மயிலை உள்ளது. கடவுளின் நட்பையும் பெண்ணின் அன்பையும் தேடி சுந்தரர் வந்த திருவொற்றியூரும் உள்ளது. சோழர் பல்லவர் கட்டிய கோயில்களும் இருக்கின்றன.

ஆனால் மெட்ராஸுக்கு மற்றும் ஒரு கோயில் மிகவும் முக்கியமானது.

துபாஷான திம்மப்பா, பூந்தமல்லி நாயக்கருக்கும் கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே மெட்ராஸ் குத்தகைக்கான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆங்கிலேயருக்கும் இந்தியருக்கும் ஒரு பாலமாக விளங்கியவர்கள்தான் துபாஷ்கள். (இரண்டு மொழி தெரிந்தவரே துபாஷ் என்று அழைக்கப்பட்டனர்.) ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு, கோட்டையைச் சுற்றி இந்தியர்களைக் குடியேற்றுவதற்கான பணி அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. வெள்ளையர் கோட்டைக்குத் திட்டமிடும்போதே, கோட்டையைக் கட்ட வேண்டிய தொழிலாளர்களுக்கும் ஏற்றுமதிக்கு ஜவுளிகளைத் தயாரிக்கும் நெசவாளர்களுக்கும் தங்குமிடத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பு திம்மப்பாவினுடையது.

View more at kizhakkutoday.in

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools