Tamilசினிமா

படப்பிடிப்பு முடிந்தால் தான் ஹனிமூன் – காஜல் அகர்வால் முடிவு

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர். திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.

திருமணம் முடிந்த உடனே புதுமணத்தம்பதிகள் ஹனிமூன் செல்வது வழக்கம், ஆனால் நடிகை காஜல் அகர்வால் தனது ஹனிமூனை தள்ளிவைத்துவிட்டாராம். தெலுங்கில் உருவாகி வரும் ‘ஆச்சார்யா’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளாராம். ‘ஆச்சார்யா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஹனிமூன் செல்ல அவர் திட்டமிட்டுள்ளாராம். ‘ஆச்சார்யா’ படத்தில் காஜல் அகர்வால் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.