X

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்குதல் – 13 பேர் கைது

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய 5 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். கும்பலாக சென்று கம்யூனிஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய வழக்கில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் நெல்லையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டை சேர்ந்த ஏராளமானோர் அடித்து நொறுக்கிய நிலையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டை சேர்ந்த ஏராளமானோர் அடித்து நொறுக்கிய நிலையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 9 பிரிவுகளில் வழக்குப்பதிந்த பெருமாள்புரம் காவல் நிலைய போலீசார் 13 பேரை கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.