நியூசிலாந்து சவாலுக்கு இந்திய வீரர்கள் தயார் – ரவிசாஸ்திரி பேட்டி

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி தொடர்பாக இந்திய அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

நாங்கள் முதல் டெஸ்ட்டில் சரியாக விளையாடவில்லை. ஆனால் நான் எப்போதும் இதுபோன்ற தோல்வி ஏற்படுவது நல்லது தானே என்று நம்புகிறேன். இதுபோன்ற தோல்விதான் உங்களது மனநிலையை திறக்கும்.

நீங்கள் தோல்வியை சுவைக்கவில்லை என்றால் உங்கள் மனநிலை ஒரு முடிவை தீர்மானிக்கும் அல்லது அந்த முடிவை இறுதி செய்து விடும்.

நியூசிலாந்தில் தோல்வியை சந்தித்தது நல்லது தான். இதன் மூலம் கற்றுக்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. நியூசிலாந்து அணி என்ன செய்கிறது? என்ன எதிர்பார்க்கிறது? என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இது ஒரு நல்ல பாடம்.

2-வது டெஸ்ட்டில் நியூசிலாந்துக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 8 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறோம். இதில் 7 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம். ஒரு தோல்வி ஏற்பட்டதால் பயப்பட தேவையில்லை. இந்த அணியின் பாதையை மாற்ற வேண்டும் என்று யாரும் நினைக்கவும் வேண்டாம்.

டெஸ்ட் கிரிக்கெட்டும், ஒருநாள் போட்டியும் முற்றிலும் வேறுபாடு கொண்டவை. இங்கிலாந்து- நியூசிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது முற்றிலும் வித்தியாசமானது. ஆனாலும் முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு எந்த சாக்கு போக்குகளை சொல்ல நாங்கள் இங்கு வரவில்லை.

அஸ்வின் உலகம் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரது பேட்டிங்கில் முன்னேற்றம் அடைவது தேவையானதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news