நான் ஒருபோதும் நடிப்பில் இருந்து ஓய்வு பெற மாட்டேன் – நடிகர் ஷாருக்கான்

இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான், சமீபத்தில் வெளியான பதான் திரைப்படத்தில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் சாதனை படைத்தது. ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஷாருக்கான் சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஓய்வுபெற்ற பிறகு உங்களுக்கு அடுத்த பெரிய நட்சத்திரம் யார்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஷாருக்கான், “நான் ஒருபோதும் நடிப்பிலிருந்து ஓய்வு பெற மாட்டேன். ஒருவேளை என்னை வீழ்த்த நினைத்தால், நான் முன்பைவிடவும் அதிரடியாக வருவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools