Tamilசெய்திகள்

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சாத் பூஜை வாழ்த்து

சூரியனைப் போற்றி வணங்கும் மாபெரும் பண்டிகையாக சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. இன்று மாலை மறையும் சூரியனையும், நாளை காலை உதயசூரியனையும் கோடிக்கணக்கான பக்தர்கள் வழிபடுவார்கள்.

சாத் பண்டிகை பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சாத் பூஜையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தப் பண்டிகை சூரியனையும் இயற்கையையும் வணங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.