Tamilசெய்திகள்

நாகப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரையும் இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேர் சொந்த ஊர் திரும்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.