நல்ல கதாபாத்திரமாக இருந்தால் எந்த வேடத்திலும் நடிக்க தயார் – நந்திதா

அட்டகத்தி படம் மூலம் அறிமுகமான நந்திதா, எதிர் நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்கள் மூலம் கவனிக்கப்பட்டார். தேவி 2 படத்தில் நடித்தவர் அடுத்து 2 படங்களில் தனி கதாநாயகியாக நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி:-

தமிழைவிட தெலுங்கில் அதிக கவனம் செலுத்துவது ஏன்?

சினிமாவுக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிறது. தமிழில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் வருகின்றன. எனவே போரடித்ததால் தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். சில படங்கள் வெற்றி பெற்றதால் அங்கே நான் பிசியானதும் உண்மைதான். இந்தி, மலையாள படங்களில் நடிக்கவும் தயார்.

தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா என்ன வித்தியாசம்?

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை இயல்பாக காட்டுவார்கள். தெலுங்கில் சாதாரண கதாபாத்திரமாக இருந்தாலும் அழகாக காட்டுகிறார்கள். தமிழில் நான் நடித்த குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் தான் எனக்கு பேர் வாங்கி கொடுத்தன.

அம்மா வேடத்தில் திடீர் என்று நடித்தது ஏன்?

நல்ல கதைகள் என்றால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயார்.

விருந்து நிகழ்ச்சி செல்லும் வழக்கம் உண்டா?

ஒருநாள் போனேன். அது சுத்தமாக பிடிக்கவில்லை. இரவு கண்விழித்தால் மறுநாள் சோர்வாகி விடுகிறது. எனவே பார்ட்டிகளுக்கு செல்வதில்லை.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools