Tamilசினிமா

நடிகர் அவதாரம் எடுத்த இயக்குநர் செல்வராகவன்

‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘7ஜி ரெயின்போ காலணி’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய செல்வராகவன், கடைசியாக இயக்கிய ‘என்.ஜி.கே’ எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகியப் படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கினார்.

இந்த நிலையில், செல்வராகவன் திடீரென்று நடிகர் அவதாரம் எடுத்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘சாணிக் காயிதம்’ படத்தில் மிக முக்கியமான வேடத்தில் செல்வராகவன் நடிக்கிறார். இப்படத்தின் கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பெண்களை மையப்படுத்திய படமாக உருவாகும் இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *