Tamilசெய்திகள்

தொலைக்காட்சிகளில் தேமுதிக நிர்வாகிகள் இனி கலந்து கொள்வார்கள் – பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

தேமுதிகவின் கொடி நாளையொட்டி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கொடி ஏற்றி வைத்தார். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கூட்டணி பற்றி இனி தேமுதிகவிடம் கேட்காதீர்கள். அதிமுகவிடம் கேளுங்கள்.

* கூட்டணியில் எந்த குழப்பமோ, பிரச்சனையோ இல்லை.

* தேமுதிக பொதுக்குழு – செயற்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து நல்ல அறிவிப்பு வரும்.

* தொலைக்காட்சி விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகள் இனி கலந்து கொள்வர்.

இவ்வாறு அவர் கூறினார்.