Tamilசெய்திகள்

தேவேந்திர பட்னாவிஸ் கொரோனாவால் பாதிப்பு

மராட்டியத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே மாநில அரசு பொதுமக்கள் கூட்ட நெரிசலான பகுதிகளில் முககவசம் அணியுமாறு அறிவுறுத்தி உள்ளது.

இந்தநிலையில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை அவர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

அதில், “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் உள்ளேன். டாக்டர்களின் அறிவுரைப்படி மருந்து மற்றும் சிகிச்சை எடுத்து கொள்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

தேவேந்திர பட்னாவிசுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவது 2-வது முறையாகும். ஏற்கனவே 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.