Tamilசெய்திகள்

தேர்வுகள் ரத்து செய்யப்படுவது ஏன்? – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

கடலூரில் கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசித்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

* தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.

* தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள் செய்வதன் காரணமாக தொற்று கட்டுக்குள் உள்ளது.

* உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் கொரோனாவுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம்.

* கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளன.

* கடலூரில் கொரோனா தடுப்புக்காக 39 நடமாடும் மருத்துவக்குழுக்கள் செயல்படுகின்றன.

* கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் 9,965 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

* கடலூரில் மட்டும் 3 ஆண்டுகளில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,114 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது

* கடலூர் மாவட்டத்தில்தான் அதிகளவு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நீட் தேர்வு, இ-பாஸ் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் கூறியதாவது:

* மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாகவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

* கொரோனா தாக்கம் குறைந்தபின் நீட் தேர்வு நடத்துமாறு பிரதமருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன்.

* யார் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை இ-பாஸ் முறை இருந்தால்தானே கண்டறிய முடியும் என்று அவர் கூறினார்.