Tamilசெய்திகள்

தேர்தல் ஏற்பாடுகள் திருப்தியாக உள்ளது – நாம் தமிழர் வேட்பாளர் மேனகா பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகா இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் அனைத்தும் திருப்தியாக உள்ளது. மக்கள் ஆர்வமாக வாக்களிப்பதை பார்க்கும்போது நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.