தெலுங்கானா எம்.எல்.ஏ-க்களில் 73 பேர் குற்ற பின்னணி கொண்டவர்கள்!

தெலுங்கானா சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 119 எம்.எல்.ஏ.க்களில் 73 பேர் குற்ற வழக்குகளை சந்தித்து வருவது தெரிய வந்துள்ளது. அவர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த டெல்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த சிந்தனை சங்கம் இத்தகவலை தெரிவித்துள்ளது.

இவர்களில், 47 பேர், கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றம் போன்ற கடுமையான குற்ற வழக்குகளை சந்தித்து வருகின்றனர். குற்ற வழக்குகளை சந்திப்பவர்களில் அதிகம்பேர் (50 பேர்) தெலுங்கானா ராஷ்டிர சமிதியை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த சட்டசபையில் இடம்பெற்ற ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.7 கோடியே 70 லட்சமாக இருந்தது.

ஆனால், நடப்பு சட்டசபையில் இடம்பெறும் எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு 2 மடங்காக உயர்ந்து, ரூ.15 கோடியே 71 லட்சமாக உள்ளது. காங்கிரசை சேர்ந்த ராஜ்கோபால் ரெட்டி ரூ.314 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news