Tamilவிளையாட்டு

தெற்காசிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஷிப் – இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா

மாலத்தீவில்  தெற்காசிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா கடைசி லீக் ஆட்டத்தில் மாலத்தீவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் இந்திய வீரர் மன்விர் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலடியாக 45-வது நிமிடத்தில் மாலத்தீவு கோல் அடித்தது. இதனால் இந்தியா- மாலத்தீவு1-1 என சமநிலை பெற்றன.

2-வது பாதி நேர ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் அபாரமாக விளையாடினார். அவர் 62 மற்றும் 71-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்தார். இதனால் 3-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சுனில் சேத்ரி 124 போட்டிகளில் விளையாடி 79 கோல்கள் அடித்தார்.