தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பும்ரா விலகல்

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், வருகிற 2-ந்தேதி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் பும்ரா இடம் பிடித்திருந்தார்.

இந்நிலையில் முதுகுத் தண்டில் லேசான எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார் என பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

முதன்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆர்வத்தில் இருந்த பும்ராவுக்கு, காயம் தடைக்கல்லாக அமைந்துவிட்டது. பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news