Tamilசெய்திகள்

தென்னகத்து போஸ் முத்துராமலிங்கத் தேவரை நன்றியோடு நினைவுகூர்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! “தென்னகத்து போஸ்” பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றி யோடு நினைவுகூர்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.