துப்பாக்கி காட்டி மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – பெண் எம்.எல்.ஏ கோரிக்கை

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள கீழ்வாணி மூங்கில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.என்.காளியண்ணனின் 24-வது நினைவு நாள் பொதுக்கூட்டம், உள்ளாட்சி தேர்தல் வெற்றி விழா கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி கலந்து கொண்டார்.

பின்னர் பாலபாரதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் காரில் வந்த போது கரூர் மாவட்டம் மணவாசி சுங்கச்சாவடியில் அனுமதி சீட்டு இருந்தும் தனது காரை சுங்கசாவடி ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இது குறித்து சுங்கச்சாவடி ஊழியர்களுடன் பேசி கொண்டிருக்கும் போதே துப்பாக்கி காட்டி ஒருவர் என்னை அச்சுறுத்தினார்.

இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சுங்கச்சாவடியில் ஆயுதம் ஏந்திய நபர்களை வைத்திருப்பது பொது மக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் ஒரு தனியார் நிறுவனம் சுங்கச்சாவடியில் கன்மேன் நிற்க வைப்பது சரியான நடவடிக்கை இல்லை.

கேரளா மற்றும் வட மாநிலங்களைப் போல் சுங்கச்சாவடிகளை உடனடியாக முற்றிலும் நீக்கவேண்டும். சுங்கச்சாவடிகளால் தமிழகத்தில் தொழில்கள் முடங்கியுள்ளது. முறையற்று வசூலிக்க செய்யப்படும் தொகைகளை மாநில அரசு கண்காணித்து முறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news