Tamilசினிமா

துப்பறிவாளன் 2 படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்தது

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் போலீஸ் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்த துப்பறிவாளன் படம் 2017-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது அதே கூட்டணியில் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஷால் ஜோடியாக ஆஷியா நடிக்கிறார். மேலும் நாசர், ரகுமான், பிரசன்னா, கவுதமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இளையராஜா இசையமைக்க்கும் இப்படத்தின், முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் 40 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, அடுத்த கட்டமாக இந்தியாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை விஷால் பிலிம் பேக்ட்ரி சார்பில் விஷால் தயாரித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *