தி.மு.க. சமூக வலைதள செயற்பாட்டாளர் ஸ்டாலின் ஜேக்கப் மரணம்

தி.மு.க. சமூக வலைதள செயற்பாட்டாளரும், பிரபல புகைப்பட கலைஞருமான ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் வேளாண்மைத்துறை தனி நிதிநிலை அறிக்கைக்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஜேக்கப் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில், ஜேக்கப் மற்றும் உடன் வந்த ஜீவா என்பவரும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில் தி.மு.க. சமூக வலைதள செயல்பாட்டாளர் ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப் இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் – உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும்!” என்று பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools