திருநெல்வேலி பாராளுமன்ற அஎம்.பி ஞான டிரவியத்திற்கு திமுக தலைமை நோட்டீஸ்

திருநெல்வேலி பாராளுமன்ற எம்.பி. ஞான திரவியம் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில் திமுக கட்சியின் தலைமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புகார் குறித்த விளக்கத்தினை 7 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக பொதுச்செயலார் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்சியின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் புகார் வந்துள்ளது. விளக்கத்தை நேரிலோ, தபால் மூலமாகவே அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news