Tamilசெய்திகள்

திரிபுரா முதலமைச்சராக மாணிக் சகா இன்று பதவி ஏற்கிறார் – பிரதமர் மோடி பங்கேற்பு

திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க. கூட்டணி அபார வெற்றி பெற்றது. 32 தொகுதிகளில் பா.ஜ.க.வும், 1 தொகுதியில் கூட்டணி கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது.

இதற்கிடையே, பா.ஜ.க. உயர்மட்டக்குழு தலைவர்கள் தலைமையில் திரிபுரா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திரிபுரா முதல் மந்திரியாக மாணிக் சகா தேர்ந்தெடுக்கப்படுவதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

இதன்மூலம் திரிபுராவின் முதல் மந்திரியாக 2-வது முறையாக மாணிக் சகா பதவியேற்க உள்ளார். இதையடுத்து, ஆளுநரைச் சந்தித்த மாணிக் சகா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்நிலையில், திரிபுராவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடக்கிறது. பா.ஜ.க.வை சேர்ந்த மாணிக் சகா முதல் மந்திரியாக பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மந்திய மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.