Tamilசெய்திகள்

திமுக கூட்டணி சுயநலக்கூட்டணி – எடப்பாடி பழனிச்சாமி காட்டம்

பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

திமுக கூட்டணி சுயநலக்கூட்டணி. சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல கூட்டணி அமைத்துள்ளனர். தமிழகத்தில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க விவசாயிகளின் நண்பனாக தமிழக அரசு செயல்படுகிறது.

மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற தகுதிவாய்ந்த பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்கவேண்டும்.

எம்பியாகவும் மத்திய நிதிமந்திரியாகவும் இருந்த சிதம்பரம், இந்த சிவசங்கை தொகுதிக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அவரே செய்யாதபோது அவரது மகன் கார்த்தி எப்படி திட்டங்களை கொண்டு வருவார்?

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *