Tamilசெய்திகள்

தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் நாளை சாலை மறியல்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன் கூறியதாவது:-

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பிரச்சனை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. ஓய்வூதியர்களுக்கு 106 மாதங்களாக அக விலைப்படி உயர்வு வழங்கப்பட வில்லை. இதனை வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும், மேல்முறையீடு செய்து அரசு காலம் தாழ்த்துகிறது.

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன் வழங்கப்படவில்லை. மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை. இந்த பிரச்சனைகளில் விரைந்து தீர்வு காண வலியுறுத்தி, கடந்த 16-ந்தேதி முதல் வீடு தோறும் தொழிலாளர்களிடமும், பொதுமக்களிடமும் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சார இயக்கத்தை நடத்தி உள்ளோம்.

இதன் தொடர்ச்சியாக நாளை (27-ந்தேதி) தமிழகம் தழுவிய அளவில் 9 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். சென்னையில் பல்லவன் இல்லம் அருகே மறியல் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.