Tamilசெய்திகள்

தமிழக மீனவர்கள் 55 பேரை கைது செய்த இலங்கை – பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக நோட்டீஸ்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 55 மீனவர்களையும், 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று சிறை பிடித்தனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்த நிலையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது பற்றி பாராளுமன்ற மக்களவையில் விவாதிக்கக் கோரி தி.மு.க. எம்.பி.க்கள் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு இன்று நோட்டீஸ் அளித்தார்.