தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்கரை படையினர் கடந்த மாதம் 31-ந்தேதி கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 21-ந்தேதி சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்றுடன் 21 மீனவர்களின் சிறைக்காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களின் காவலை நீடிக்காமல் இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் 21 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools