Tamilசெய்திகள்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதற்கு தீர்வு காண வேண்டும் – நீதிபதிகளிடம் கோரிக்கை

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடகோரியும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மதுரையை சேர்ந்த கே.கேஇ ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு கடந்த 2-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இவ்விவகாரம் தொடர்பாக உரிய உத்தரவுகளை மத்திய அரசுக்கு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் கே.கே. ரமேஷ் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

அப்போது, நீதிபதிகள் வழக்கை விசாரணைக்கு ஏற்பதாகவும், அதே வேளையில் விசாரணையை இன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்திருந்தனர். இவ்வழக்கு நீதிபதி அனிருத்தா போஸ், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கபட்டனரா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின், இதுவரை 86 மீனவர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை எனவும் தமிழக மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை தாக்கி கைது செய்கிறது. எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கையை வைத்தனர்.