X

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

தமிழகத்தில் கள்ளச்சாராய சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் அ.தி.மு.க., பா.ஜ.க. தனித்தனியே புகார் அளித்து இருந்தது.

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.