தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா! – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் பணியில் இருந்த காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ரெயில் நிலையம் மூடப்பட்டது.

மந்தைவெளி ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த 5 காவலர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து ரெயில் நிலையம் மூடப்பட்டது.

இதையடுத்து சென்னையில் ரெயில் நிலையம் ஒன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறியுள்ளது இதுவே முதல் முறை.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools