தக்காளி விலை தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ 160 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்து வந்த நிலையில், இன்று 10 ரூபாய் அதிகரித்து 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் சில்லறை விற்பனையில் 200 ரூபாயை தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று தக்காளி விலை உயர்ந்துள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக 1200 டன் தக்காளி வரும். ஆனால், இன்று 310 டன் தக்காளி மட்டுமே வந்ததால் நேற்றைய விலையை விட இன்று 10 ரூபாய் அதிகரிக்க முக்கிய காரணமாக என வியாபாரிகள் தெரிவித்தனர்.
![AddThis Website Tools](https://cache.addthiscdn.com/icons/v3/thumbs/32x32/addthis.png)