தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியிருப்பதாவது:-

கேரளா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலையில் 1 கிலோ மீட்டர் உயரம் வரை காற்றின் சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று முதல் 27-ந் தேதி வரை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணிநேரத்தில் திருச்செந்தூரில் 2 செ.மீ., தென்காசி, மணிமுத்தாற்றில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools