Tamilவிளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக் நிறைவடைந்தது

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. பாராலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 24வது இடத்தை பிடித்தது.

நேற்றூ மாலை கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் காட்சிகளுடன் நிறைவு விழா நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற அனைத்து நாடுகளின் அணிகளும், தங்கள் நாட்டு தேசியக்கொடியுடன் அணிவகுத்து வந்தன.

இந்திய அணிக்கு, 2 பதக்கம் வென்ற இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.