டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு – கெஜ்ரிவால் அரசு வெற்றி

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெற்றிப் பெற்றுள்ளது.

ஆம் ஆத்மிக்கு மொத்தமுள்ள 62 எம்எல்ஏக்களில் 58 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலும் 4 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஏற்கனவே, பாஜக பேரம் பேசி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், பெரும்பான்மையை அரவிந்த் கெஜ்ரிவால் நிரூபித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools