டி20 போட்டியில் டோனியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இது 1000-வது டி20 கிரிக்கெட் போட்டியாகும். பெருமைக்குரிய இந்த போட்டியில் ரோகித் சர்மாவும் இரண்டு சாதனைகள் படைத்துள்ளார்.

இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை இதற்கு முன் (98 போட்டிகளில் விளையாடி) எம்எஸ் டோனி பெற்றிருந்தார்.

இன்றைய போட்டி ரோகித் சர்மாவுக்கு 99-வது போட்டியாகும். இதன்மூலம் இந்தியாவுக்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 111 போட்டிகளில் விளையாடி முதல் இடத்திலும், ஷாகித் அப்ரிடி 99 போட்டிகளில் விளையாடி 2-வது இடத்திலும் உள்ளனர்.

மேலும், 8-வது ரன்னை எடுக்கும்போது டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் சாதனையில் விராட் கோலியை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார். தற்போது ரோகித் சர்மா 2452 ரன்கள் அடித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news