டி20 கிரிக்கெட்டின் புதிய விதிமுறை அறிமுகமானது!

இங்கிலாந்தில் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டி ‘டை’யில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் ‘டை’யில் முடிந்ததால் பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ஐசிசி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. ஆகவே தற்போது விதிமுறைகளை மாற்றியுள்ளது. டி20-க்கும் மாற்றியுள்ளது. டி20-க்கான புதிய விதிமுறை தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா தொடரில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

1. போட்டி ‘டை’யில் முடிந்தால் சூப்பர் ஓவர் விளையாடப்படும். சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனால், தொடர்ச்சியாக முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் விளையாடப்படும். ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீசப்படும்.

2. இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தால் ஒரு அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும்

3. ஒவ்வொரு அணிக்கும் தலா ஒரு ‘ரிவியூ’ வாய்ப்பு வழங்கப்படும்.

4. சூப்பர் ஓவர் மழை போன்ற காரணத்தினால் நீண்ட நேரமாக நடைபெறவில்லை என்றால் போட்டி கைவிடப்படும்.

5. போட்டியில் 2-வது பேட்டிங் செய்த அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்யும்.

6. முதலில் பீல்டிங் செய்யும் அணி பந்தை தேர்வு செய்யலாம். 2-வது பீல்டிங் செய்யும் அணி அதே பந்தை தேர்வு செய்யலாம். பந்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினால், போட்டி நடைபெறும் சூழ்நிலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

7. பீல்டர்கள் கட்டுப்பாடு போட்டியின் கடைசி ஓவரில் எப்படி இருந்ததோ, அதே போன்று இருக்கும்.

8. சூப்பர் ஓவருக்கான இடைவேளை ஐந்து நிமிடங்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news