டி.என்.பி.எல் கிரிக்கெட் – திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் கோவையில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் விளையாடின.

டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் அடித்தது. அந்த அணி கேப்டன் அஸ்வின் 25 ரன்கள் அடித்தார். மணி பாரதி 37 ரன்கள் எடுத்த நிலையிலும் விக்கெட்டை பறிகொடுத்தார். சிறப்பாக விளையாடிய ராஜேந்திரன் விவேக் 38 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 139 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய சேப்பாக் அணியில் கேப்டனும் தொடக்க வீரருமான கவுசிக் காந்தி 44 ரன்கள் குவித்தார். ஜெகதீசன் 31 ரன்கள் அடித்தார். பின்னர் சசிதேவ்-சோனுயாதவ் ஜோடி சேர்ந்தனர். சோனு 26 ரன்கள் அடித்தார். சசிதேவ் 15 ரன்களும் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். ராஜகோபால் சதீஷ் 8 ரன்னுடன் வெளியேறினார்.

9.2 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் அடித்தது. இதையடுத்து அந்த அணி 5 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools