டிவி விவாத நிகழ்வுகளில் பங்கேற்க கூடாது – செய்தி தொடர்பாளர்களுக்கு காங்கிரஸ் தடை

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றி இரண்டாவது முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் தோல்வி குறித்த் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டி.வி. சேனல் விவாதங்களில் செய்தித் தொடர்பாளர்கள் பங்கேற்க ஒரு மாதம் தடை விதித்து காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், டி வி சேனல் விவாதங்களில் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டு உள்ளது என பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools