Tamilசெய்திகள்

டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டஸ்மாக் கடைகளில் மது வாங்க வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு மது வழங்கப்படாது. ஒரே நேரத்தில் 5 நபர்கள் மட்டுமே மது வாங்க அனுமதிக்கப்படும்.

மது வாங்க நிற்பவர்களில் 2 பேருக்கு இடையில் 6 அடி இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும். கடைகளுக்கு முன் கூட்டமாக இருக்க கூடாது. கூட்டம் கூடினால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.