டாக்டர் தமிழிசை சவுந்தராஜனின் ராஜினாமா ஏற்பு – ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் பதவியில் இருந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரென ராஜினாமா செய்தார். இது தொடர்பான, ராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் அரசியல் வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். அனேகமாக, தென்சென்னை தொகுதியில் பா.ஜனதா சார்பில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் களம் காண்பார் என தெரிகிறது.

இந்நிலையில் புதுச்சேரி, தெலுங்கானா கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணை நிலை கவர்னர் பொறுப்புகளை ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools