Tamilசினிமா

ஜோதிகாவுடன் மோதும் நயன்தாரா

தமிழில் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் இந்தியில் தமன்னா நடிப்பில் காமோஷி என்ற பெயரில் ஜூன் 14-ந்தேதி வெளியானது. பிரபுதேவா வில்லனாக நடித்திருந்தார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது இந்த படம்.

இந்தி பதிப்பின் தோல்வியால் தமிழில் இப்படத்தை வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த படம் அறிவித்தபடி ஜூலை 26-ந்தேதி வெளியாகவில்லை. ஆகஸ்ட் 1-ந்தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 2ந்தேதி சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள ஜாக்பாட் திரைப்படம் ரிலீசாகிறது. இதனால் நயன்தாரா, ஜோதிகா படங்கள் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் மோதவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *