Tamilசினிமா

ஜெய் பீம் தரத்தில் சூப்பர் ஸ்டாரின் படமாக ‘வேட்டையன்’ இருக்கும் – நடிகை மஞ்சு வாரியர் நம்பிக்கை

ஜெய் பீம் படத்திற்குப் பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் திரைப்படம் வேட்டையன். இந்த படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.

இதில் ரஜினியை தவிர அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா தகுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை,மும்பை, ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில சில வாரங்களுக்கு முன் முடிந்தது.

தற்பொழுது படத்தை குறித்த அப்டேட்டை மஞ்சு வாரியர் சமீபத்தில் நடந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். படத்தில் மஞ்சு வாரியர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், ரஜினிக்கு மனைவியாக இப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகந்திற்கான திரைப்படமாக இது இருக்கும், சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடிப்பது மற்றும் ஜெய் பீம் எடுத்த இயக்குனருடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது.

படம் வெளியாகும் தேதி குறித்த தகவல் எனக்கு தெரியாது, இன்னும் நான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பணிகளை மேற்கொள்ளவில்லை. என்று கூறியுள்ளார்.