Tamilவிளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இந்தியா

ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், குரூப் சி பிரிவில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தான் அணியும், குரூப் டி பிரிவில் 2-ம் இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்தது. டீகே வில்லி 71 ரன்னும், கொரே மில்லர் 64 ரன்னும் எடுத்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் காசிம் அக்ரம் 3 விக்கெட்டும், அவைஸ் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்துவீச்சில் பாகிஸ்தான் சிக்கி திணறியது.

பாகிஸ்தான் மெஹ்ரன் மும்தாஸ் 29 ரன்னும், அப்துல் பாசி 28 ரன்னும், இர்பான் கான் 27 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், பாகிஸ்தான் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 119 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சார்பில் வில்லியம் சல்மான் 3 விக்கெட்டும், டாம் விட்னி, ஜாக் சின்பீல்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.